பொது சுகாதார பரிசோதகர்கள் விலகுவதாக அறிவிப்பு!!


இன்று (17) வெள்ளிக்கிழமை நண்பகல் 12.30 முதல் நாடளாவிய ரீதியில் தமது கடமையில் இருந்து விலகுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யு.ரோஹணவால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பாதுகாப்பு இல்லாமல் கடமைகளைச் செய்ய இயலாமையின் காரணமாக அந்த சங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பொது சுகாதார பரிசோதகர்கள் விலகுவதாக அறிவிப்பு!! பொது சுகாதார பரிசோதகர்கள் விலகுவதாக அறிவிப்பு!! Reviewed by Editor on July 17, 2020 Rating: 5