மருதமுனை கட்சி முக்கியஸ்தகர்களுடனான கருத்தரங்கு!!


எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பாக மருதமுனை கட்சி முக்கியஸ்தகர்களுடனான கருத்தரங்கு சனிக்கிழமை (11) மருதமுனை புளூ சீ மண்டபத்தில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் முன்னாள் இராஜங்க அமைச்சரும் திகாமட்டுல்ல மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு சமகால அரசியல் சம்மந்தமாக தெளிவுபடுத்தினார்.

மேலும் இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள்  உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மருதமுனை கட்சி முக்கியஸ்தகர்களுடனான கருத்தரங்கு!! மருதமுனை கட்சி முக்கியஸ்தகர்களுடனான கருத்தரங்கு!! Reviewed by Editor on July 13, 2020 Rating: 5