ஓய்வுபெறும் எண்ணம் எனக்கில்லை- பிரதமர் தெரிவிப்பு

இரண்டு வருடங்களின் பின்னர் பிரதமர் பதவியையோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையோ இராஜினாமா செய்யும் எண்ணம் எனக்கில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் என்னை ஐந்து வருடங்களுக்கு தெரிவு செய்துள்ளனர். அந்த காலம் முடிவடைவதற்கு முன்னர் விலகமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் முரணான செய்திகள் வெளியாகின்ற போதிலும் இரண்டுவருடங்களின் பின்னர் விலகிச்செல்வதற்கான திட்டம் எதுவுமில்லை என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.


ஓய்வுபெறும் எண்ணம் எனக்கில்லை- பிரதமர் தெரிவிப்பு ஓய்வுபெறும் எண்ணம் எனக்கில்லை- பிரதமர் தெரிவிப்பு Reviewed by Editor on September 10, 2020 Rating: 5