'சுவ தாரணி' ஆயுள்வேத மருந்து வழங்கி வைக்கப்பட்டது



(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய கொரோனா
தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் சமூக சுகாதார ராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டம் தற்போது நாடு பூராகவும் நடைபெற்று வருகின்றன.

இந்த வேலை திட்டத்தின் ஒரு கட்டமாக நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையினால் பாரம்பரிய ஆயுள்வேத முறைகளுக்கு அமைய தயாரிக்கப்பட்ட உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் 'சுவ தாரணி' ஆயுர்வேத பானம் இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு புதன்கிழமை (11) பாண்டிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலையில் நடைபெற்றது.

நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் அதிதியாக கலந்து கொண்டு ஒரு தொகுதி மருந்துகளை பாண்டிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலையின் மருத்துவ பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.அப்துல் ஹாபிலிடம் வழங்கி வைத்தார்.

பிரதேசத்திலுள்ள பொதுமக்கள், அரச சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் போன்றோருக்கு இந்த 'சுவ தாரணி' நோய் எதிர்ப்பு சக்தி பானம் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன ஆயுள்வேத பானத்தை அருந்தும் முறை  பற்றியும் வைத்திய அதிகாரி கே.எல்.எம். நக்பர் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தினார்.


'சுவ தாரணி' ஆயுள்வேத மருந்து வழங்கி வைக்கப்பட்டது  'சுவ தாரணி' ஆயுள்வேத மருந்து வழங்கி வைக்கப்பட்டது Reviewed by Editor on November 12, 2020 Rating: 5