
இலங்கையில் நாளை (07) திங்கட்கிழமை காலை 05.00மணி முதல் மேல் மாகாணத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில, கொழும்பு மாவட்டத்தின் புளுமென்டல் பொலிஸ் பிரிவு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு, களனி பொலிஸ் பிரிவு ஆகியவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நாளை (07) காலை 05 மணி முதல் கொழும்பு மாவட்டத்தின் கொம்பனிதெரு பொலிஸ் பிரிவின் ஹுனுபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் 60 தோட்டம், வெல்லவத்தை பொலிஸ் பிரிவின் கோகிலா வீதி ஆகிய பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலபிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, குருந்துஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு, எவரிவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, வெலிகடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, அத்தோடு பேலியகொட பொலிஸ் பிரிவின் பேலியகொடவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு, பேலியகொடை கங்கபட கிராம உத்தியோகத்தர் பிரிவு, மீகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, பட்டிய - வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் மற்றும் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும் நாளை திங்கட்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
