முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஸ கட்டடத்தொகுதிக்கு இன்று (20) விஜயம் செய்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் அங்குள்ள குறைபாடுகளை பார்வையிட்டதுடன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கேட்டறிந்து கொண்டார்.
மீனவர்களின் இழப்பீட்டுத் திட்டங்கள், மீனவ காப்புறுதி திட்டங்கள் சம்பந்தமாகவும் விரிவாக ஆராய்ந்ததுடன் மீனவ சமாஸத்தினால் மிக அவசரமாக எதிர்பார்க்கப்படுகின்ற தேவைப்பாடுகளை எழுத்துருவிலான கோரிக்கையொன்றை சமர்பிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
சமாஸ கட்டடத்தொகுதிக்கு விஜயம் செய்தார்..
Reviewed by Editor
on
December 20, 2020
Rating:
