நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு 4 ஆண்டுகள் கடூழியச் சிறைத்த தண்டனை விதித்து இன்று (12) செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017ஆம் ஆண்டு பிரதி அமைச்சராக இருந்த இவர், ‘நாட்டில் உள்ள நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள்‘ என குறிப்பிட்டிருந்தார்.
இவரின் இந்த கருத்து நீதிமன்றத்தை அவமதித்தாக கூறி மாகல்கந்தே சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோரால் இவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சன் எம்.பிக்கு 4 ஆண்டுகள் கடூழியச் சிறைத்த தண்டனை!!
Reviewed by Editor
on
January 12, 2021
Rating: