கொரோனாவிற்கான தடுப்பூசி நிந்தவூரில்...


(றிஸ்வான் சாலிஹு)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் இன்று (30) சனிக்கிழமை ஒழுங்கு செய்யப்பட்ட சுகாதார திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான கொரோனாவிற்கான தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர் தலைமையில் இடம்பெற்றது.

இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் சுகாதார வைத்திய அதிகாரி நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.








கொரோனாவிற்கான தடுப்பூசி நிந்தவூரில்... கொரோனாவிற்கான தடுப்பூசி நிந்தவூரில்... Reviewed by Editor on January 30, 2021 Rating: 5