மக்களின் குறைகளை கேட்டறிந்தார் அலி சப்ரி ரஹீம்

 


"கம சமக பிலிசந்தரக்" "ගම සමග පිළිසදරක්" வெட சமக யலி கமட "වැඩ සමග යලි ගමට" எனும் தேசிய வேலைத்திட்டதின் கீழ் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்களின் குறைகளை கேட்டறியும் நிகழ்ச்சித்திட்டம் நேற்று (4) திங்கட்கிழமை கட்டகாடு, கொத்தான்தீவு மற்றும் பெருக்குவெட்டான் போன்ற பிரதேசங்களுக்கான கிராம அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதேசத்தின் கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியவற்றின் பங்குபற்றலுடன் அப்பிரதேச மக்கள் மற்றும் மதத்தலைவர்களுடனான கூட்டம் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் அலி சப்ரி ரஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ் உள்ளிட்ட மேலும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மக்களின் குறைகளை கேட்டறிந்தார் அலி சப்ரி ரஹீம் மக்களின் குறைகளை கேட்டறிந்தார் அலி சப்ரி ரஹீம் Reviewed by Editor on January 05, 2021 Rating: 5