தேசிய காங்கிரஸில் இருந்து விலகிய பிரதேச சபை உறுப்பினர்!!!

 


(றிஸ்வான் சாலிஹூ)

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் தலைமை வகிக்கும் தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.பி.பதுர்தீன் விலகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொள்ளும்‌ ஊடக சந்திப்பு நேற்று (13) புதன்கிழமை பாலமுனையில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


தேசிய காங்கிரஸில் இருந்து விலகிய பிரதேச சபை உறுப்பினர்!!! தேசிய காங்கிரஸில் இருந்து விலகிய பிரதேச சபை உறுப்பினர்!!! Reviewed by Editor on January 14, 2021 Rating: 5