நிர்வாக அதிகாரிக்கான பிரியாவிடை

 


திருகோணமலை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய எஸ்.கே.டி.நெரன்ஞன் எதிர்வரும் திங்கட்கிழமை (01) திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் நிர்வாக உத்தியோகத்தராக கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

இதனை முன்னிட்டு இன்று (29) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் பிரியாவிடை வைபவம் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது அவரது சேவையை  பலரும் பாராட்டியதுடன் அரசாங்க அதிபரால் நினைவுப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


நிர்வாக அதிகாரிக்கான பிரியாவிடை நிர்வாக அதிகாரிக்கான பிரியாவிடை Reviewed by Editor on January 29, 2021 Rating: 5