(றிஸ்வான் சாலிஹு)
கிழக்கு மாகாணத்தில் சுயதொழில் வேலை வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதன்மூலம் மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டலில் கிராமங்கள்தோறும் கத்தாழை பயிர்ச்செய்கை தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதன் ஒரு அங்கமாக திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் ஒருதொகை பயனாளிகளுக்கு கற்றாழை கன்றுகள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (11) திருக்கோவில் பிரதேச செயலக வளாகத்தில் கிழக்கு மாகாண திட்டப்பணிப்பாளர் ஜனாப் அலியார் ஆசாத் தலமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர், செயலக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருக்கோவிலில் கத்தாழை பயிர்ச்செய்கை அறிமுகம்!!
Reviewed by Editor
on
January 13, 2021
Rating: