பாடசாலைகள் பெப்ரவரி 15 திறக்கப்படாது..!

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 15ம் திகதி திறக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதியே திறக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு நேற்றைய தினம் அறிவித்திருந்த நிலையிலேயே, கல்வி அமைச்சர் இன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.



பாடசாலைகள் பெப்ரவரி 15 திறக்கப்படாது..!  பாடசாலைகள் பெப்ரவரி 15 திறக்கப்படாது..! Reviewed by Editor on February 10, 2021 Rating: 5