பிரதிப் பொது முகாமையாளராக எம்.எம்.எம்.நஸீல் பதவியுயர்வு...



(றிஸ்வான் சாலிஹூ)

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊவா மாகாண பிரதிப் பொது முகாமையாளராக சம்மாந்துறையைச் சேர்ந்த பொறியியலாளர் எம்.எம்.எம்.நஸீல் பதவியுயர்வு பெற்றுள்ளார்.

நீர் வழங்கல் சபையின் அம்பாறை உதவிப் பொது முகாமையாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே இவருக்கு இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டது.

திருகோணமலையில் இன்று (03) புதன்கிழமை காலை இடம்பெற்ற நீர் வழங்கல் சபையின் நிகழ்வொன்றில் வைத்து சபையின் பொது முகாமையாளரால் பதவியுயர்வு கடிதம் வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதிப் பொது முகாமையாளராக எம்.எம்.எம்.நஸீல் பதவியுயர்வு... பிரதிப் பொது முகாமையாளராக எம்.எம்.எம்.நஸீல் பதவியுயர்வு... Reviewed by Editor on February 03, 2021 Rating: 5