
அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரிக்கு இரண்டாம் கட்டமாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிற்றுனர்களுக்கான நேர்முகப்பரீட்சை இம்மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேசியக் கல்விக் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 14 மற்றும் 15ம் திகதிகளில் நடைபெற்ற நேர்முகத் தேர்விற்கு சமூகமளிக்காத அவர்களின் வெற்றிடத்திற்கு அடுத்து வரும் இஸட் புள்ளி மதிப்பெண் அடிப்படையில் முதல் நிலையில் உள்ளவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேர்முகத்தேர்வு புதிய அழைப்புக் கடிதங்கள் விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் குறித்த தினம் காலை மணிக்கு சமூகமளிக்குமாறு பீடாதிபதி கேட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்காக இந்த இரண்டாம் கட்ட நேர்முகத்தேர்வுகள் இடம்பெறுகிறது.
அட்டாளைச்சேனை அல்- அறபா வித்தியாலயத்தில் குறித்த நேர்முகப் பரீட்சை இடம்பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Reviewed by Editor
on
March 21, 2021
Rating: