பொலிஸ் அதிகாரியின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி!!!


பெண்ணின் தலையை துண்டித்து கொலை செய்த பொலிஸ் அதிகாரியின் சடலத்தை மனைவி ஏற்க மறுத்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று (07) இரவு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலத்தை பொறுப்பேற்ற குடும்பத்தினர் அதனை வீட்டினுள் வைக்காமல் வெளியே அரை மணி நேரம் வைத்து விட்டு இறுதி அஞ்சலி செலுத்தாமல் மத வழிப்பாடுகளின்றி சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் மனைவி மற்றும் 3 பிள்ளைகள் வெளியில் வராமல் வீட்டிற்குள்ளே இருந்து சடலத்தை ஏற்க மறுத்ததால், சிலர் சடலத்தை கல்லறைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரியின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி!!!  பொலிஸ் அதிகாரியின் சடலத்தை ஏற்க மறுத்த மனைவி!!! Reviewed by Editor on March 08, 2021 Rating: 5