அக்கரைப்பற்று மாநகர பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு!

(றிஸ்வான் சாலிஹூ)

நாட்டில் மீண்டும் தலை தூக்கியுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக அக்கரைப்பற்று மாநகர பொதுமக்கள்,வர்த்தகர்கள் மற்றும் பொதுச்சந்தை வியாபாரிகளுக்கு விழிப்புணர்வூட்டும் களவிஜயமொன்று இன்று (28) காலை கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் RMDJ.ரத்னாயக்க அவர்களுடன் சுகாதாரப் பிரிவினர்,பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மற்றும் காவல்துறையினர்,மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





அக்கரைப்பற்று மாநகர பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு! அக்கரைப்பற்று மாநகர பகுதியில் கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு! Reviewed by Editor on April 28, 2021 Rating: 5