நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையேற்பு!!!


(றிஸ்வான் சாலிஹூ)

நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் பரூஸா நக்பர் இன்று (27) செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தனது கடமைகளை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நிரந்தரமாக பொறுப்பேற்று கொண்டார்.

இவர் சுகாதார திணைக்களத்தின் வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் அக்கரைப்பற்றில் இருந்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு ஜனவரி (2021) 01ஆம் திகதி கடமையை பொறுப்பேற்றிருந்தாலும், அவர் கடமையாற்றிய அக்கரைப்பற்று காரியாலயத்தில் கொவிட்-19 இன் முடிவுறாத சில வேலைகள் நிறைவு செய்ய வேண்டியிருந்த நிலையில் அவர் மீண்டும் அங்கு சென்று, அவ்வேலைகள் நிறைவு பெற்றிருந்த நிலையில் மீண்டும் இன்று நிந்தவூர் காரியாலயத்தில் நிரந்தரமாக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையேற்பு!!! நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையேற்பு!!! Reviewed by Editor on April 27, 2021 Rating: 5