கைது செய்யப்பட்ட மணிவண்ணன் பிணையில் விடுதலை...


இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றிரவு (09) வெள்ளிக்கிழமை அவர் முற்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் வரி வசூலிப்பாளர்களுக்கு சீருடை வழங்கியமையை அடுத்து சர்ச்சை எழுந்தது. தமிழீழ காவற்றுறையின் சீருடையை ஒத்த சீருடையை வழங்கியதாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதற்கு அமைவாக அவர் இன்று அதிகாலை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


கைது செய்யப்பட்ட மணிவண்ணன் பிணையில் விடுதலை... கைது செய்யப்பட்ட மணிவண்ணன் பிணையில் விடுதலை... Reviewed by Editor on April 09, 2021 Rating: 5