ஓய்வுபெறும் சட்ட மா அதிபர் ஜனாதிபதியை சந்தித்தார்...

ஓய்வுபெறும் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (24) திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

திரு. தப்புல டி லிவேராவின் சேவையை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், அவரது ஓய்வு வாழ்க்கைக்காக வாழ்த்துக்களைத் தெரிவித்தார். திரு. தப்புல டி லிவேரா, நாட்டின் 47வது சட்ட மா அதிபர் ஆவார்.

பதில் சொலிஸிடர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் புதிய சட்ட மா அதிபராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 (ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


ஓய்வுபெறும் சட்ட மா அதிபர் ஜனாதிபதியை சந்தித்தார்... ஓய்வுபெறும் சட்ட மா அதிபர் ஜனாதிபதியை சந்தித்தார்... Reviewed by Editor on May 24, 2021 Rating: 5