இலங்கையில் எவரும் கரும்பூஞ்சையால் பாதிக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அத்தோடு, அம்பாறையில் ஒருவர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளார் என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபர் காசநோயினால் பாதிக்கப்பட்டிருந்ததோடு அவர் அதற்கான மருந்துகளை எடுக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
(தினக்குரல்)
கரும்பூஞ்சை பாதிப்பு எவருக்குமில்லை - அமைச்சர் சுதர்சினி..
Reviewed by Editor
on
May 24, 2021
Rating:
