அகில இலங்கை ரீதியாக கலைப்பிரிவில் தேசிய ரீதியாக முதலாம் இடத்தினை தெகிவளை பெஸ்ப்தேரியன் பாடசாலையில் கற்கும் சமல்ஹா சிவ்மினி பெற்றுள்ளாா். சிவ்மினி தெகிவளை மிருகட்சிச் சாலை பின்புறத்தில் உள்ள 2 பேர்ச் மாநகர வீட்டுத்தி்ட்ட குடியிருப்பில் வாழ்கின்றாா். தந்தை சாதாரனமாக வாடகைக்கு அமா்தத்ப்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுணா். கொவிட் காலத்தில் மட்டும் ஸூம் ஒன்லைன் 2 பாடங்களை மட்டுமே படித்தேன். க.பொ.த.சா-த தரத்தில் சிறந்த பெறுபேறுகள் எடுத்தும் நான் கலைப்பிரிவினையை விரும்பிப் படித்தேன் அதில் மனைவியல் பொருளாதாரம் , ஊடகம், அரசியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை விரும்பி வீட்டில் படித்தேன். கொவிட் காலங்களில் அனேகமாக பாடசாலைகள் கொழும்பு மாவட்டத்தில் கூடிய காலங்கள் லொக் டவுன் மூடி இருந்தது. எதிர் காலத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வருவதற்கே நான் ஆசைப்படுவதாகவும் தெரிவித்தாா். அத்துடன் எனது பெற்றாா். ஏனைய உப அதிபா்கள் ஆசிரியா்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் அத்துடன் எனது பாடசாலைக்கு அகில இலங்கை ரீதியில் பெயர் பெற்றுக் கொடுத்ததையிட்டு நான் பெருமிதம் அடைகின்றேன் என மாணவி கூறினாள்
Reviewed by Sifnas Hamy
on
May 05, 2021
Rating:

