மாகமாறு பிரதேசத்தில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி

கொரோனா தொற்று மூலம் மரணமடையும் உடல்களை கிண்ணியா மாகமாறு பிரதேசத்தில் அடக்கம் செய்வதற்கு சுகாதார அமைச்சினால் இன்று (25) செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று திருகோணமலை மாவட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் தெரிவித்துள்ளார்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி மஜ்மா பிரதேசத்தில் கொரோனாவால் மரணித்த உடல்களை அடக்கம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



மாகமாறு பிரதேசத்தில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி மாகமாறு பிரதேசத்தில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி Reviewed by Editor on May 25, 2021 Rating: 5