ரி20 போட்டிகளுக்கு ஐசிசி நடுவராக பணியாற்றியவருக்கு கொரோனா!!!

இலங்கை  இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் ஐசிசியின் ஆட்ட நடுவராக செயற்பட்ட பில்விட்டி கேஸ் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

25ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளின் மூலம் இது உறுதியாகியுள்ளது. இருந்த போதிலும் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என்றும், பத்து நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தலை அவர் முன்னெடுப்பார் எனவும் அந்த சபை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து இலங்கை அணிகளின் வீரர்கள் இதனால் பாதிக்கப்படவில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



ரி20 போட்டிகளுக்கு ஐசிசி நடுவராக பணியாற்றியவருக்கு கொரோனா!!! ரி20 போட்டிகளுக்கு ஐசிசி நடுவராக பணியாற்றியவருக்கு கொரோனா!!! Reviewed by Editor on June 28, 2021 Rating: 5