இலங்கையில் கொரோணாவின் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு அரசாங்கத்தினால் ரூபா 5000 பெறுமதியான உலருணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
இதனை ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவையாளர் பிரிவு 02 இல் வசிக்கும் மக்களுக்கு துரிதமாக கிடைப்பதற்கான ஒழுங்குகளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் நசீர் அஹமட் அவர்கள் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து இன்று (14) திங்கட்கிழமை அப்பிரதேச மக்களுக்கு குறித்த உலருணவுப்பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இவ்வுலருணவு பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட், ஏறாவூர் பிரதேச செயலாளர் ஏ.சி அப்கர்,ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டப்ளியு.கே. ஜெயந்த்த, ஏறாவூர் நகரசபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம். தஸ்லிம், குறித்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு பொறுப்பான கொவிட் - 19 செயலணி அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Reviewed by Editor
on
June 14, 2021
Rating:


