எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அவரது பாரியாரும் கொழும்பில் உள்ள ஹுனுபிட்டிய கங்காராம விகாரைக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு மகா சங்கத்தின் ஆசீர்வாதங்களைப் பெற்றனர்.
கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் அவரது பாரியாரும் திரித்துவத்தின் ஆசீர்வாதங்களைப் பெறும் பெருட்டு கங்காராம விகாரைக்கு சமூகமளித்தனர்.
பேராசிரியர் சங்கைக்குரிய அகலகட சிறிசுமன தேரர், சங்கைக்குரிய நீதியாவெல பாலித தேரர், சங்கைக்குரிய உங்கொட தம்மிந்தா தேரர்,கங்காராமை விகாரையின் சங்கைக்குரிய அஸ்ஸஜி தேரர் ஆகியோர் உள்ளிட்ட மகா சங்கத்தினர்களால் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்களுக்கும், சகல நாட்டு மக்களுக்காகவும் ஆசிர்வாதங்களை வழங்கியதோடு பிரித் அனுஷ்டானங்களையும் நிகழ்த்தினர்.
குணமடைந்த சஜித், பூஜை வழிப்பாடுகளிலும் ஈடுபட்டார்.
Reviewed by Admin Ceylon East
on
June 11, 2021
Rating:
Reviewed by Admin Ceylon East
on
June 11, 2021
Rating:
