ஒலுவில், பாலமுனை தொடக்கம் அட்டாளைச்சேனை வரையிலான வீதிகளுக்கு காபட் இடும் பணி!!

(றிஸ்வான் சாலிஹு)

நாட்டில் உள்ள ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் 41 மில்லியன் ரூபா செலவில் ஒலுவில், பாலமுனை தொடக்கம் அட்டாளைச்சேனை வரையிலான கடற்கரை வீதிகளுக்கு காபட் இடும் வேலைத்திட்டம் இன்று (28) திங்கட்கிழமை திகாமடுல்ல மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாலமுனை பிரதேச மின்ஹாஜ் வட்டாரத்தின் செயற்பாட்டாளர் எம்.ஏ.அபூபக்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம்.அமானுல்லாஹ் உப தவிசாளர் எஸ்.எம்.எம்.ஹனிபா உட்பட மேலும் பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.







ஒலுவில், பாலமுனை தொடக்கம் அட்டாளைச்சேனை வரையிலான வீதிகளுக்கு காபட் இடும் பணி!! ஒலுவில், பாலமுனை தொடக்கம் அட்டாளைச்சேனை வரையிலான வீதிகளுக்கு காபட் இடும் பணி!! Reviewed by Editor on June 28, 2021 Rating: 5