மொடேர்னா தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, மொடர்னாவில் உடலிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் எவையும் இல்லைஎன்பதால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த அச்சப்படவேண்டியதில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் வைத்தியர் ரஞ்சித் பத்துவ இதனை தெரிவித்துள்ளார்.
லூசிபெரசஸ் என்ற நொதிகள் மொடேர்னா தடுப்பூசியில் காணப்படுகின்றது என வெளியான தகவல்களை ஆராய்ந்தோம் அவற்றில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளதோடு, சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களால் மக்கள் ஏமாறக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Reviewed by Editor
on
July 23, 2021
Rating:
