கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் அவர்களின் தலைமையில் இரண்டாவது நாளாகவும் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை கொவிட்-19 தடுப்பூசி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அந்தவகையில், பொதுமக்கள், அரச உத்தியோகத்தர்கள், கற்பினி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் வருகை தந்து தடுப்பூசியை பெற்றுக் கொள்கின்றார்கள்.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவில் இரண்டாது நாளாகவும் தடுப்பூசி செலுத்தும் பணி!!!
Reviewed by Editor
on
July 25, 2021
Rating: