(நிலாம் இஸ்மாயில்)
அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு இன்று (25) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம். தெளபீக் விஜயம் செய்தார்.
திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்த மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியசாலையில் அமையப் பெற்றுள்ள புதிய கட்டிடத்தையும் மற்றும் கொவிட்-19 கொரோனா தடுப்பு மருந்து ஊசி ஏற்றப்படும் இடத்துக்கும் சென்று பார்வையிட்டார்.
வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியான டாக்டர். எஸ்.எம். முனாஸ்தீன் அவர்கள் வைத்தியசாலையின் உள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை மாகாண சுகாதார பணிப்பாளரிடம் எடுத்துரைத்தார்.
டாக்டர் கே.எல்.எம்.நக்பர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தார் எம்.எஸ்.எம்.நியாஸ் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் ஊழியர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.