ஜந்து கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு!!

அரச சேவைக்கான ஐக்கிய தாதியர் சங்கத்தின் 7 கோரிக்கைகளில் 05 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஏனைய இரு கோரிக்கைகளையும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது நிறைவேற்றவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

அரச சேவைக்கான ஐக்கிய தாதியர் சங்கத்துடன் வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனடிப்படையில்,

01. தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுதல்.

02. நல்லாட்சியின் காலத்தில் 07.12.2017 மற்றும் 32/2017 ஊடாக நிறுத்தப்பட்ட ஊழியர்களின் நிலையை மீண்டும் பெற்றுக் கொடுத்தல்.

03. இடைநிறுத்தப்பட்டுள்ள தரம் III இல் இருந்து தரம் II க்கான பதவி உயர்வை ஐந்து வருடங்களுக்கும், தரம் II இல் இருந்து தரம் I க்கு ஏழு ஆண்டுகள் பதவி உயர்வு வழங்கல்.

04. 20 ஆயிரம் ரூபாய் வருடாந்த சீருடை கொடுப்பனவை பெற்றுக் கொடுத்தல்.

05. தற்போது 36 மணித்தியாலங்களாக காணப்படும் வேலை நேரத்தை வாரத்திற்கு 05 நாட்களாக 

( 30 மணித்தியாலங்கள்) கருதி, விசேட குழுவிற்கு ஆய்வுக்கு அனுப்புதல்.

குறித்த 5 விடயங்களை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.



ஜந்து கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு!! ஜந்து கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி உடனடி தீர்வு!! Reviewed by Editor on July 03, 2021 Rating: 5