(சாய்ந்தமருது செய்தியாளர்)
ஜனாதிபதியின் சிந்தனையில் கீழ் பொது மக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல் முறையை இலகுவாக்குவதற்காக நாடு முழுவதும் 197 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் திட்டத்தில் கீழ் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான பொலிஸ் நிலையம் இன்று (23) வெள்ளிக்கிழமை காலை சாய்ந்தமருதில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் எல்.கே. டவுள்யூ. கமன் சில்வாவினால் அவர்களினால் உத்தியோகபூர்வமாக புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட பொலிஸ் நிலையம்
Reviewed by Editor
on
July 23, 2021
Rating: