பொத்துவில் தவிசாளரின் முக்கிய அறிவித்தல்!!

பொத்துவில் பிரதேசத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக பாக்கியவத்தை 13 பிரதேசம் முற்றாக  முடக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுப் பரவல் ஏனைய பிரதேசங்களுக்கும் பரவும் அபாயம் அதிகரித்து வருவதனையிட்டு இன்று (16) வெள்ளிக்கிழமை பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ எம்.எச்.அப்துல் றஹீம் அவர்களின் பங்கேற்புடன் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலாளர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் இராணுவத்தினருடன் இடம்பெற்ற கூட்டத்தின் பிரகாரம் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

01. 2021.07.17 ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் 12.00 மணிமுதல் 2021.07.19 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04.00 மணி வரை பொத்துவில் பிரதேசத்தினை முற்றாக முடக்குதல்.

02. நாளைய தினம் 12.00 மணி வரை அத்தியவசிய தேவைக்கான கடைகளை மாத்திரம் திறப்பதுடன் ஏனைய புடவைக் கடைகள், சலூன் கடைகள், உணவங்கள், பேக்கரிகள், நகைக் கடைகள், மல்டி சொப் என்பவற்றை மூடுதல் மற்றும் வீடுகளில்  தேவையற்ற ஒன்று கூடல், கல்யாண நிகழ்வு மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் தவிர்த்துக் கொள்ளல்.

எனவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களைக் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கொள்வனவு செய்து கொள்ளுமாறும், தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுமாறு கெளரவ தவிசாளர் பொத்துவில் பொதுமக்களை கேட்டுள்ளார்.





பொத்துவில் தவிசாளரின் முக்கிய அறிவித்தல்!! பொத்துவில் தவிசாளரின் முக்கிய அறிவித்தல்!! Reviewed by Editor on July 16, 2021 Rating: 5