ஏன் நாம் தடுப்பூசி (Vaccination) எடுத்துக்கொள்ள வேண்டும்?

தடுப்பூசி எனப்படுவது எமது உடலில் உள்ள நிர்ப்பீடணம் எனும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டவல்லது.

குழந்தைகளுக்கு புறக் காரணிகளால் ஏற்படும் தாக்கம் காரணமாக கிருமிகளால் ஏற்படும் தொற்று அபாயம் அதிகம் என்பதனால்தான்  குழந்தைகளுக்கு நாம் vaccination எனும் தடுப்பூசியை உரிய பருவத்தில் வழங்குகின்றோம்.

அது போலவே நாமும் இக்கால கட்டத்தில் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம் Corona virus இன் தாக்கத்தில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

தடுப்பூசியானது நோய் எதிர்ப்புக்  கட்டமைப்பை உருவாக்கும் நிர்ப்பீடன படிமுறையை அதிகரிக்கவல்லது.

இதனால்தான் SARS COV - 2 எனும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி எடுத்துக்கொள்ளுவதை உலக சுகாதார நிறுவனம் அவசரகால தேவையின் நிமித்தம் அங்கீகரித்துள்ளது.

பின்வரும் -  தடுப்பூசிகளாவன phase 3 trial எனும் மனிதனுக்கு பாதுகாப்பானது எனும் கட்டத்தை நிவர்த்தி செய்ததன் பின்னரே பாவனைக்கு வந்துள்ளன.

அவையாவன,

1. Pfizer
2. Moderna
3. Oxford வகைகள்
4. Sino pharm
5. Sputnik
6. Johnson & Johnson

மேற்சொன்ன முதல் 5 வகையான vaccine களும் இரு முறை தடுப்பூசிகள் பெறுவதன் மூலம் பருவகால Corona வைரஸ்  இன் தாக்கதில் இருந்து அல்லது குறைந்த பட்சம் நோயின் கடுமைத் தன்மையில் இருந்தேனும் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இன்னும் இத்தடுப்பூசிகளை அதே பருவ காலத்தில் இரண்டாம் முறை பெற்றுக் கொள்ளும் போது (second dose) பொதுவாக அதே வகையான தடுப்பூசியை அல்லது மாற்று வகை தடுப்பூசிகளைக் கலவன் முறையிலும் பெற்றுக் கொள்வது சில நிபந்தனைகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக Oxford தடுப்பூசி பெற்றவர்கள் இரண்டாம் booster dose  ஆக (ஊக்கியாக) Pfizer தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது.

இவ்வாறான  vaccination முறையை நாசுக்காக mocktail என அழைக்கப்படுகிறது.  இவ்வாறான mock tail தடுப்பூசிகள் வைரஸ் பிறழ்வுகளுக்கு எதிரான வினைத்திறன் கொண்டது என்ற எடுகோள்கள் விஞ்ஞான உலகத்தில் தற்போது நிலவிவருகிறது.

மேலும் Johnson & Johnson  எனும் தடுப்பூசி ஒரு தரம் ஏற்றுவது ஒரு முளுப் பருவ காலத்துக்கும் போதுமானது.

யார் யார் தடுப்பூசியை
எடுத்துக்கொள்ள  வேண்டும் ?

1.தொற்றா நோயுள்ள அனைவரும் இத்தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுதல் உசிதமானது.

உதாரணமாக நீரிழிவு, உயர் குருதி அழுத்தம், இதயம் சம்மந்தப்பட்ட நோயுள்ளவர்கள், சிறுநீரக நோயாளிகள்,  Asthma (ஈழ) நோயாளிகள், Thyroid (கழலை) நோயாளிகள், மன நோயாளிகள், மன அழுத்தத்திற்கு உள்ளான நோயாளிகள்  இத்தடுப்பூசிக்கு மிகவும் பொருத்தமானவர்கள்.

2. 18 வயதுக்கு மேற்றப்பட்ட அனைவரும் இத் தடுப்பூசிகள் ஏற்றிக் கொள்ளலாம். இலங்கயில் தற்போது 30 வயதுக்கு மேற்றப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியானது வழங்கப்படுகிறது. இன்னும் பாடசாலை மாணவர்களுக்கும், சிறார்களுக்கும்  எதிர்காலத்தில் தடுப்பூசி வழங்கப்படலாம்.

3. கற்பிணித் தாய்மார்களுக்கும், தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி வழங்குதல் உள்நாட்டின் சுகாதார கட்டமைப்பிற்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது.

#யார் யார் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளும் போது முன்னெச்சரிக்கையாக வைத்திய ஆலோசனையை பெறுதல் வேண்டும்?

1. ஏதாவது உறுப்பு மாற்று (transplant) சத்திர சிகிச்சைக்கு உட்பட்டு அது சம்பந்தமான இழையயெதிர்ப்பு தடுப்பு மருந்துகள் உபயோகிப்பவர்கள் (on immunosuppressant drug) உதாரணமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்குட்பட்டு முதல் மூன்று தொடக்கம் ஆறுமாதம் வரை அல்லது ஒரு வருடத்திற்குள் உள்ளோர்.

2.  Cancer எனும் புற்றுநோய்க்கான  chemotherapy என்னும் இரசாயன அல்லது radiotherapy  என்னும் கதிரியக்க சிகிச்சைகளை தற்போது பெற்றுக் கொண்டு இருப்பவர்கள். (மூன்று மாதத்திற்குள்)

3. எய்ட்ஸ் (AIDS) போன்ற தெற்று உள்ளவர்கள்

4. உடல் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக் கூடிய மாத்திரைகளைப் பாவிப்பவர்கள் (உதாரணமாக Prednisolone 20mg கூடுதலான செறிவை உடைய மாத்திரை நாளொன்றுக்கு எடுப்பவர்கள்)

5. அதீத ஒவ்வாமை எனும் Anaphylaxis கட்டத்தில் உள்ளவர்கள்.

மேற்சொன்ன வகுப்பினர் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளும் முன்  வைத்திய ஆலோசனையைக் கட்டாயம்  பெறுதல் வேண்டும்.

#யார்  இந்த vaccine இத்தடுப்பூசியை  ஏற்றுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளலாம்?

தடுப்பூசிகளில் சேர்க்கப்பட்ட ஏதவாது ஒரு இராசனத்துக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இத்தடுப்பூசிகளை ஏற்றுவதலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்

வழமையில் உள்ள  தடுப்பூசிகழும் புதிய பிறழ்வும் (Delta variant)

வழமையில் உள்ள  தடுப்பூசிகள் புதிய பிறழ்வுகளுக்கு எதிராகவும் தொழிற்படவல்லன என ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றிக்கொள்வதன் மூலம் நோயினால் ஏற்படும் பாரிய தாக்கங்களான மூச்சுத் திணறல், வைத்திய சாலை அனுமதி, அதி தீவிர சிகிச்சைப்பிரிவு அனுமதி என்பனவற்றில் இருந்தாவது  குறைந்தபட்சம் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

கொரோனா பிறழ்வுகளிலிருந்து
எவ்வாறு எம்மைப் பாதுகாப்பது?

1. கைகளை உரிய முறையில் அடிக்கடி கழுவிக்கொள்ளல் 
2. சமூக இடைவெளி 1 -2 மீட்டர் வரையில் பேணல்
3. தேவை நிமிர்த்தம் வெளிச்செல்லும் போது உரிய முறையில் முகக்கவசம் அணிதல்
4.தும்மும் போதும் இருமும் போதும் சுகாதார வழிமுறைகளைப் பேணல்
5.தடுப்பூசி பெற்றுக்கொள்ளல்

நன்றி-

Dr Muhammad Abdullah Muhammad Jazeem
MBBS, MRCGP
Fellowship in Diabetes
Specialist Family Medicine.



ஏன் நாம் தடுப்பூசி (Vaccination) எடுத்துக்கொள்ள வேண்டும்? ஏன் நாம் தடுப்பூசி (Vaccination) எடுத்துக்கொள்ள  வேண்டும்? Reviewed by Editor on July 17, 2021 Rating: 5