"எரிபொருள் விலையை உயர்த்திய கமன்பிலாவை வெளியேற்றுவோம், நிவாரணத்தை குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்." எனும் கருப்பெருளில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் இன்று (19) திங்கட்கிழமை காலை நாடாளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை தாங்கியதோடு,ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தன்னிச்சையாக அதிகரித்த எண்ணெய் விலையை அரசாங்கம் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏகமனதாக கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!!!
Reviewed by Editor
on
July 19, 2021
Rating: