(றிஸ்வான் சாலிஹூ)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தனது விடுதலைக்குப் பின்னர் நேற்று (14) புதன்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு, அவர் முன்னிலையில் தனது உத்தியோகபூர்வ காரியாலய கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாக கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பூ.பிரசாந்தன் உத்தியோகபூர்வ காரியாலய கடமைகளை பொறுப்பேற்றார்...
Reviewed by Editor
on
July 15, 2021
Rating: