சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் – ஹட்டனிலும் போராட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்பதோடு குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஹட்டனில் இன்று (21) புதன்கிழமை காலை 11 மணிக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொழிலாளர் தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு முன்னணியின் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. தலைமையேற்றோடு, தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவர், மகளிர் அணி உறுப்பினர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்று, நீதிக்காக குரல் எழுப்பினர்.

”டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும், இந்த விடயத்தில் சட்டம் உரிய வகையில் செயற்பட வேண்டும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புபட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் ” என்ற வாசகமுடைய அட்டைகளை ஏந்தி இப்போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

மலையகத்திலிருந்து சிறார்களை எவரும் வேலைக்கு அமர்த்தக்கூடாது, அவர்களுக்கான கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் – ஹட்டனிலும் போராட்டம் சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் – ஹட்டனிலும் போராட்டம் Reviewed by Editor on July 21, 2021 Rating: 5