மாணவர்களுக்கு சிப்தொர புலமைப் பரிசில் வழங்கல்!!!

(றிஸ்வான் சாலிஹு)

சிப்தொர புலமைப் பரிசில் வேலைத்திட்டத்திற்காக க.பொ.சாதாரண பரீட்சையில் சித்தி பெற்று க.பொ.உயர்தரம் படிக்கின்ற 124 மாணவர்களுக்கு மாதாந்தம் 1500 ரூபாய் இரண்டு ஆண்டுகளுக்கு சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம். றஸ்ஸான் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (19)  நடைபெற்றது.

பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சமூர்த்தி தலைமைபீட முகாமையாளர், சமூர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், திட்ட முகாமையாளர், மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.










மாணவர்களுக்கு சிப்தொர புலமைப் பரிசில் வழங்கல்!!! மாணவர்களுக்கு சிப்தொர புலமைப் பரிசில் வழங்கல்!!! Reviewed by Editor on July 21, 2021 Rating: 5