இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 82வது அகவையை முன்னிட்டு பழைய பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இ.தொ.கா வின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் உருவ சிலைக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மலர் மாலை அணிவித்தார்கள்.
நுவரெலியா மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதமரின் பெருந்தோட்டங்களுகான இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் மலர் மாலை அணிவித்தார்கள்.
மேலும் இ.தாெ.கா வின் தலைமைக் காரியாலயமான சௌமியபவனில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றதோடு, இதன்போது இ.தொ.காவின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.