அக்கரைப்பற்று-02ஆம் குறிச்சி, உடையார் வீதியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும், எரிமலை பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் எழுத்தாளரும், சிறந்த மேடைப் பேச்சாளருமான அபூபக்கர் அவர்கள் நேற்றிரவு (17) சனிக்கிழமை வபாத்தானார்கள்.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் அக்கரைப்பற்று பத்ர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவர் ரஷீதாவின் கணவரும், பர்ஸானா சம்சுதீன்(MA முஸ்லீம் மத்திய கல்லூரி அக்கரைப்பற்று (தேசிய பாடசாலை ) பசீல், ரினோஸ் ஆகியோரின் தந்தையும் சம்சுடீன் PHI அவர்களின் மாமனாரும், மர்ஹும் ஆனாசானா அப்துஸ்ஸமது அவர்களின் சகோதரரும் ஆவார்.
யாஅல்லாஹ் அன்னாருடைய பண்ணையை சுவனத்தின் பூஞ்சோலை ஆக்கிடுவாயாக ஆமீன்
தகவல் - றியாட் முகிடீன் (ஆசிரியர்)
அக்கரைப்பற்றின் மூத்த ஊடகவியலாளர் காலமானார்....
Reviewed by Editor
on
July 18, 2021
Rating: