பானந்துறை பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையம்!!

பொலிஸ் சேவையை மிகவும் திறமையாகவும் மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டு வரும் அடிப்படையில் பானந்துறை கிரான- அலுபோமுல்ல பிரதேசத்தில் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை புதிதாக பொலிஸ் நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல உட்பட  பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.





 


பானந்துறை பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையம்!! பானந்துறை பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையம்!! Reviewed by Editor on July 18, 2021 Rating: 5