அக்கரைப்பற்றில் இன்று இடம்பெற்ற சம்பவம் இறுதியாக இருக்க இறைவனிடம் பிராத்திப்போம்!!!

(றிஸ்வான் சாலிஹூ)

இன்று (26) திங்கட்கிழமை மாலை வேளையில் அக்கரைப்பற்றில் இடம்பெற்ற அனைவரினதும் உள்ளங்களையும் கவலை அடைய வைத்த தொலைத் தொடர்பு கோபுரம் முறிந்து விழுந்து இரண்டு வீடுகள் சேதமானதோடு, இறைவனின் உதவியுடன் வீட்டில் இருந்த எவருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாமல் இருப்பதை பார்க்கும் போது இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம்.

இந்த தொலைத்தொடர்பு கோபுரம் முறிந்து விழுந்து கிடப்பதை பார்க்கும் போது, இம்மக்கள் தெய்வீனமாக காப்பாற்றப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை இறைவன் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறேன் என்று தான் குறிப்பிட வேண்டும்.

இந்த பகுதியில் அதிகமான குடியிருப்புகள் இருந்தும், அப்பகுதி மக்கள் இந்த கோபுரம் இவ்விடத்தில் வருவதை பல முறை எதிர்த்த சம்பவங்களும் நாம் அறியாமல் இல்லை, இருந்தாலும் தொடர்ச்சியாக இம்மக்களால் இந்த போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது, ஏனெனில் இவர்கள் வசதி குறைந்தவர்கள் என்பதலாகும். இந்த பலவீனத்தை கொண்டு தான் அக்கரைப்பற்று மாநகர சபை இதற்குரிய அனுமதியை கூட வழங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, உள்ளுராட்சி மன்றத் தலைவர்களே, இவ்விடத்தில் மீண்டும் இந்த கோபுரத்தை வைக்க அனுமதி கொடுக்கும் போது, தனிநபர் திருப்தியை இல்லாமல் செய்து சற்று சிந்தித்து இப்பகுதியிலுள்ள மக்களும் உயிர் வாழ வேண்டும், அவர்களும் எம்மை போன்று உயிருடன் வாழ வேண்டும் என்பதை மனதில் வைத்து இன்னுமொரு தொலைத்தொடர்பு கோபுர அனர்த்தமும் உயிரிழப்பும் இந்த பகுதியில் மட்டுமல்லாமல் ஏனைய பகுதிகளிலும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வினயமாக இந்த பகுதி மக்களின் குறையாக முன் வைக்கின்றோம்.








இப்பிரதேச மக்களால் இந்த கோபுரம் இவ்விடத்தில் அமைக்க கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடாத்திய நிகழ்வுக்குரிய ஆதாரம்...




அக்கரைப்பற்றில் இன்று இடம்பெற்ற சம்பவம் இறுதியாக இருக்க இறைவனிடம் பிராத்திப்போம்!!! அக்கரைப்பற்றில் இன்று இடம்பெற்ற சம்பவம் இறுதியாக இருக்க இறைவனிடம் பிராத்திப்போம்!!! Reviewed by Editor on July 26, 2021 Rating: 5