(றிஸ்வான் சாலிஹு)
கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சுகாதார துறையினரால் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதனடிப்படையில், அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (26) காலை 8:00 மணிக்கு பள்ளிக்குடியிருப்பு அக்-பாயிஷா மகா வித்தியாலயத்தில் கொவிட்-19ற்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவிருப்பதாக அக்கரைப்பற்று பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் எம்.ஏ.றாசீக் தெரிவித்துள்ளார்.
பிரதேச சபைக்குட்பட்ட 30 வயதிற்கு மேற்பட்ட விருப்பமிக்க ஆண்,பெண் இருபாலாரும் முடியுமான வரை தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுமாறு தவிசாளர் றாசீக் அம்மக்களை வினயமாக கேட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் தடுப்பூசி ஆரம்பம் - தவிசாளர் எம்.ஏ.றாசீக்
Reviewed by Editor
on
July 22, 2021
Rating: