(றிஸ்வான் சாலிஹு)
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தை விட்டு இடமாற்றலாகி இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு விடைபெற்றுச் செல்லும் உதவி பிரதேச செயலாளர் அல் - ஹாஜ் எம்.ஏ.சீ.அஹமட் நசீல் அவர்களை வாழ்த்தி வழியனுப்பும் பிரியாவிடை வைபவம் இன்று (26) திங்கட்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.அஹமட் சாபீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் உதவிப் பிரதேச செயலாளருக்கு வாழ்த்துப் பா மற்றும் கவிதை வாசித்து, மாலையணிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தின் கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.