வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு ரூபாய் 2,000 கொடுப்பனவு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்காக நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 2,000 ரூபாவை நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் நாடு முடக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தலா 5 ஆயிரம் ரூபாவை மாதாந்த நிவாரணக் கொடுப்பனவாக வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு ரூபாய் 2,000 கொடுப்பனவு வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு ரூபாய் 2,000 கொடுப்பனவு Reviewed by Editor on August 21, 2021 Rating: 5