வாகன வருமான உத்தரவு பத்திரங்களை வழங்கும் பணி ஓகஸ்ட் 31 வரை இடைநிறுத்தம்

 

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான உத்தரவு பத்திரங்களை வழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவல் நிலை காரணமாக, மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான உத்தரவு பத்திரங்களை வழங்கும் பணிகள் இன்று (12) முதல் எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சந்திமா திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் ,குறிப்பிட்ட காலப்பகுதியில் காலாவதியாகும் வாகனங்களுக்கான  வருமான உத்தரவு பத்திரங்களை  மீண்டும் பெற்றுக் கொள்ளும்போது ,செப்டெம்பர் 30ஆம் திகதி  வரையில் அபராதம் அறவிடப்படமாட்டாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.motortraffic.wp.gov.lk/ என்ற இணையத்தளத்தின் மூலமாக, வாகன வருமான உத்தரவு பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)




வாகன வருமான உத்தரவு பத்திரங்களை வழங்கும் பணி ஓகஸ்ட் 31 வரை இடைநிறுத்தம் வாகன வருமான உத்தரவு பத்திரங்களை வழங்கும் பணி ஓகஸ்ட் 31 வரை இடைநிறுத்தம் Reviewed by Editor on August 12, 2021 Rating: 5