சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி இன்று (04) புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த 38 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக்கோரி 4 பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் இன்று கொழும்பிற்குள் பிரவேசித்திருந்தன.
இதனைத் தொடர்ந்து காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இவர்கள் காலி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் கைது சம்பவத்தைத் தொடர்ந்து கொழும்பில் பெரும் பதற்றநிலை உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
38 ஆசிரியர்கள் அதிரடியாக கைது!!
Reviewed by Editor
on
August 04, 2021
Rating: