நாட்டில் பொது முடக்கம் விதிக்கப்படவில்லை என்றாலும், பயணக் கட்டுப்பாடு கண்டிப்பாக செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
பொது முடக்கம் விதிக்கப்பட்டால், பொருளாதாரம் பாதிக்கப்படும். மேலும் தினசரி ஊதியம் பெறுபவர்களும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என நேற்றிரவு (17) நடந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொற்றுப் பரவலைத் தடுக்க தடுப்பூசியை துரிதப்படுத்தப்படுத்த வேண்டும் என்பதோடு, அதனை செயற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பொது முடக்கம் விதிக்கப்பட்டால், பொருளாதாரம் பாதிக்கப்படும் - ஜனாதிபதி
Reviewed by Editor
on
August 18, 2021
Rating: