(றிஸ்வான் சாலிஹு)
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக சிரேஷ்ட இலங்கை கல்வி நிர்வாக அதிகாரி திருமதி. புள்ளநாயகம் அவர்கள் திங்கட்கிழமை (02) திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாணக் கல்வி திணைக்கள பணிமனையில் பதவியேற்றுக் கொண்டார்.
இவர் திருக்கோயில் மற்றும் பட்டிருப்பு கல்விப் பணிமனைகளில் வலயக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய ஒரு சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர் ஆவார்.
மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய எம்.ரீ.எம்.நிசாம் அவர்கள், தனது சேவைக் காலத்தில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து நிலவிய பதவி வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாகாண கல்விப் பணிப்பாளராக திருமதி. புள்ளநாயகம் கடமையேற்பு!!
Reviewed by Editor
on
August 03, 2021
Rating: