(றிஸ்வான் சாலிஹு)
அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் "சுபீட்சத்தின் நோக்கு" எண்ணக்கருவின் அடிப்படையில் காலநிலை மாற்றத்திற்கான நிரந்தர தீர்வு உட்பட சமூக பொருளாதாரத்தை நோக்கிய வேலைத்திட்டத்தின் கீழ், பிரதேச மட்டத்தில் சேதனப் பசளை உற்பத்தியாளர்களை தெரிவு செய்து அவர்களை எவ்வாறு ஊக்குவித்து பயிற்சியளித்தல் தொடர்பான பிரதேச செயலக உத்தியோகத்தர்களை தெளிவுபடுத்தும் கூட்டம் இன்று (17) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
பொத்துவில் பிரதேச செயலாளர் திரு. சந்தருவன் அநுருத்த அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேதன பசளை உற்பத்தியாளர்களை தெரிவு செய்து பயிற்சியளித்தல் தொடர்பான கூட்டம்
Reviewed by Editor
on
August 17, 2021
Rating: